Friday 27 May 2016

கத்திரி





வெட்கையில வேகுது உடம்பு
வெண்டக்காயோ வேகுது நோவு
கத்திரி வெயிலோ கண்சிமிட்ட மறக்குது
கார்மேகமோ கண்டு கொள்ளாமலிருக்குது
நிக்காம வடியிது வேர்வை நீரு
நிக்காம வருதா குழாயில நீரு.?
மீன் கருவாடு காலம் போய்
மனிதக் கருவாடு வந்திடுமோன்னு பயமா இருக்கு...
மேகம் வந்து சூழ்ந்தது இன்று
மழை வாருதான்னு பார்ப்போம் நன்று




படம் கூகுள் நன்றி



9 comments:

  1. கத்திரி வெயிலைக் குறித்த கவிதை அருமை சகோ
    எழுத்தின் வர்ணம் மாற்றவும் கண்களுக்கும் சுடு
    மேட்சாக இருக்கட்டும் என்று மஞ்சள் நிறம் கொடுத்தீர்களோ.....
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. கண்களுக்கும் சுடு
      மேட்சாக இருக்கட்டும் என்று மஞ்சள் நிறம் கொடுத்தீர்களோ...//

      ஹஹஹா..மாற்றி விட்டேன் சகோ...குளுமையாக... நன்றி

      Delete
  2. ஆமாமாமாம்.. ரொம்பவே தாங்க முடியவில்லை.. அப்படியே அடுத்த கவிதையா இப்போ உச்சத்தில் நிற்கிற காய்கறி விலைகளைப் பற்றியும் எடுத்து விடுங்க.

    ReplyDelete
    Replies
    1. எடுத்து விட்டுடுவோம் சகோ...நன்றி

      Delete
  3. நாளுக்கு நாள் அதிகமாகிறது. என்ன செய்வது

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்...நன்றி ஐயா

      Delete
  4. கவிதை அருமை.
    எங்கள் ஊரில் இரண்டு நாட்களாய் நல்ல மழை பெய்கிறது.

    ReplyDelete
  5. அருமை சகோ...ஆமாம்..தமிழ்நாட்டில்...ஆனால் இங்கு கேரளத்தில் மழை வந்துவிட்டது....

    கீதா: ஹும் உமையாள்நாம் தணலில் வெந்து கொண்டிருக்கின்றோம்.....கேரளத்தில் மழை...

    ReplyDelete
  6. வெயில் கவிதை அருமை சகோ

    ReplyDelete